ஒரே இரவில் 5 கடைகளில் கதவை உடைத்தும், திருட்டு…|

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் அண்மையில்  திருட்டு  சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கூரையை பிரித்தும், கதவுகளை உடைத்தும் நுழைந்த கொள்ளையர்கள்... Read more »

மனைவியின் தலையில் தேங்காயால் அடித்த கணவன்! கணவனின் கழுத்தை அறுத்த மனைவி, கணவன் பலி, மனைவி படுகாயம்.. |

மனைவியின் தலையில் தேங்காயினால் அடித்ததால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கழுத்தை வெட்டியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நாமுவ – ரணால பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த கணவன், மனைவியின் தலையில் தேங்காய் ஒன்றால் அடித்துள்ளார்.இதனால் கோபமடைந்த மனைவி,... Read more »

புகையிரதத்துடன் மோதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்…. |

புகையிரதம் வந்து கொண்டிருந்த போது கடவையை கடக்க முயற்சித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் ஹட்டன் – றொசெல்ல புகைரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களுடைய குழந்தை என 3... Read more »

இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்!

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார். 90 களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஈழத் தமிழர் விடயம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க... Read more »

இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி, மனைவி உட்பட 13 பேர் பலி!

இந்தியா- கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றபோது விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை... Read more »

கிரானில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் இன்று விடுதலை செய்யப்ட்டனர். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கடற்கரையில் கடந்த 2021, மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2... Read more »

பொருளாதாரத்தை சுயதொழில் மூலம் வளப்படுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு.

கல்முனை வடக்கு மற்றும் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பொருளாதாரத்தை சுயதொழில் மூலம் வளப்படுத்துவதற்கான பயிற்சி செயலமர்வு இன்று கல்முனை தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது கல்முனை வடக்கு, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் இஸ்லாமிக் றிலிப் நிறுவனத்தினால்... Read more »

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் விபத்து.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை வீதியினூடாக பயணம் செய்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் பிக்கப் வாகனம் வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளானது. அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த... Read more »

பொது இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரொஷான் ராஜபக்ஷ, பொலிஸ்... Read more »

இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறிய சீன உரக் கப்பல்!

சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே  சீன உரத்தை ஏற்றிய கப்பல்  இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை உர நிறுவனம், சீன... Read more »