கிரானில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்காரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேர் இன்று விடுதலை செய்யப்ட்டனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலை கடற்கரையில் கடந்த 2021, மே 18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு 7 மாதங்களாக தடுத்து வைக்க்பட்டிருந்தனர்.

இன்று மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் சட்டத்தரணிகளான திரு.ரத்தினவேல்.சுகாஸ். உட்பட பலரும்  ஆயராகியிருந்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews