ஒரே இரவில் 5 கடைகளில் கதவை உடைத்தும், திருட்டு…|

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் அண்மையில்  திருட்டு  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கூரையை பிரித்தும்,

கதவுகளை உடைத்தும் நுழைந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடிச்  சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில்  கடைகளை திறக்க சென்றிருந்த உரிமையாளர்கள் திருட்டு இடம்பெற்றதை அவதானித்து பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

குறித்த கடைகளில் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக சீ.சி.ரீ.வி கமரா உதவியடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews