4ம் திகதிக்கு முன் விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்களை மீள பெறுமாறு உத்தரவு.. |

டிசம்பர் 4ம் திகதிக்கு முன்னர் விநியோகஸ்த்தர்கள், வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பயன்படுத்தப்படாத அனைத்து உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு லிட்றோ நிறுவனத்திற்கு பாவனையாளர் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பழைய பொலித்தீன் சீல் உள்ள பயன்படுத்தப்படாத எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய பொலித்தீன் சீலுடன் கூடிய சிலிண்டர்களை விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, தற்போது வீடுகள் மற்றும் விற்பனை முகவர்களிடம் உள்ள பழைய பாதுகாப்பு ​பொலித்தினுடன் கூடிய சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்க வேண்டும்.

Recommended For You

About the Author: Editor Elukainews