பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது மிக ஆபத்தானது! மாகாண சுகாதார பணிப்பாளர்… !

வடமாகாணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், ஆபத்தான நோய் நிலைமைகளை கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி பெறுவதற்கு ஆர்வமில்லாமல் இருப்பதாக கூறியிருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதற்கு இவர்கள் தயக்கம் காட்டுவது அதிக ஆபத்தானது எனவும், அதிகமான... Read more »

யாழ்.திருநெல்வேலியில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றிருக்கின்றது. திருநெல்வேலி – முருகன் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார்... Read more »

நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு இடைக்கிடை மின்வெட்டு அமுலாகும்! இ.மி.சபை .. |

நாடு முழுவதும் நேற்றய தினம் பல மணிநேரம் மின்வெட்டு அமுலான நிலையில் நுரைச்சோலை மின் நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்புவதற்கு குறைந்தது 2 நாட்களாவது எடுக்கும் என இலங்கை மின்சாரசபை தொிவித்துள்ளது.  இதனால் நாட்டில் 2 நாட்களுக்கு இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் இலங்கை... Read more »

நாளை பதில் நாள் பாடசாலை…..!

நாளை சனிக்கிழமை அனைத்து தரங்களுக்குமான பதில் நாள்  பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.   சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறாத பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள் நாளை சனிக்கிழமை நடைபெறும் எனவும், பதில் பாடசாலைகள் அனைத்து தரங்களை கொண்ட... Read more »

புகையிரதம் வடி ரக வாகனம் விபத்து ஒருவர் பலி…..!

(கொடிகாமம் நிருபர்) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் வட்டா வடி ரக வாகனம் மோதி சற்றுமுன்னர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்தில் தவசிகுளம் கொடிகாமம் தவசிகுளம்  பகுதியை சேர்ந்த 32 வயதுடைய  சூசைநாதன் பிரதீபன் என்பவரே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில்... Read more »

புலிகளின் தங்கத்தை தேடிய கும்பல்,காணியை அபகரிப்புக்கும் முயற்சி! வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.. |

முல்லைத்தீவில் விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய குற்றச்சாட்டில் அகப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளருடன் சென்று காணி ஒன்றை அடாத்தாக அளக்க முயற்சித்ததுடன் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்துவதாக கூறி அச்சுறுத்திய விசேட அதிரடிப்படையினர் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... Read more »

யாழ்.மாவட்டத்திலுள்ள 3 தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் முயற்சியை சீனா கைவிட்டது ஏன்?

யாழ்.மாவட்டத்தின் 3 தீவுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திட்டத்தை இடைநிறுத்துவதாக சீன துாதுவராலயத்தின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் திட்டத்தில் 3ம் தரப்பு ஒன்று பாதுகாப்பு விடயத்தில் கரிசனை கொண்டிருப்பதால் இந்த திட்டம்... Read more »

யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் தாதி ஒருவரின் அறைக்குள் புகுந்து துணிகர கொள்ளை! விசாரணைகள் ஆரம்பம்.. |

யாழ்.வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்றய தினம் இரவு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வைத்தியசாலையில் பணிசெய்யும் தாதியர் ஒருவருடைய அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் வைத்தியசாலையின் பணம் என்பன இவ்வாறு... Read more »

ஒமிக்ரோன் திரிபு வைரஸ் நாட்டுக்குள் ஏற்கனவே பரவியிருக்கலாம்..! சுகாதார அமைச்சு.

கொவிட்-19 புதிய பிறழ்வான ஒமிக்ரோன் நாட்டிற்குள் ஏற்கனவே நுழைந்திருக்கலாம். என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் மரபணு வரிசைமுறைக்கு உட்பட்டாலன்றி மாறுபாட்டையுடைய ஒமிக்ரோன் நோயாளர்களை அடையாளம்... Read more »

பெருங்கற்கால தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட யாழ்.ஆனைக்கோட்டையில் மண் அகழ்வை நிறுத்த தீர்மானம் .. |

பெருங்கற்கால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆனைக்கோட்டை – கரைப்பிட்டி மயானத்தில் மண் அகழ்வுகளால் தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படும் நிலையில் மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வலி,தென்மேற்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ இந்த பிரேரணையை சபையில் முன்வைத்த நிலையில் சபை... Read more »