பெருங்கற்கால தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட யாழ்.ஆனைக்கோட்டையில் மண் அகழ்வை நிறுத்த தீர்மானம் .. |

பெருங்கற்கால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆனைக்கோட்டை – கரைப்பிட்டி மயானத்தில் மண் அகழ்வுகளால் தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படும் நிலையில் மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வலி,தென்மேற்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ இந்த பிரேரணையை சபையில் முன்வைத்த நிலையில் சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் துறைசார் அதிகாரிகள், வல்லுனர்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews