ஒமிக்ரோன் திரிபு வைரஸ் நாட்டுக்குள் ஏற்கனவே பரவியிருக்கலாம்..! சுகாதார அமைச்சு.

கொவிட்-19 புதிய பிறழ்வான ஒமிக்ரோன் நாட்டிற்குள் ஏற்கனவே நுழைந்திருக்கலாம். என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் மரபணு வரிசைமுறைக்கு உட்பட்டாலன்றி மாறுபாட்டையுடைய ஒமிக்ரோன் நோயாளர்களை அடையாளம் காண முடியாது.

இந்த பிறழ்வை உடனடியாக அடையாளம் காண முடியாது என்றும், சோதனை விலை அதிகம் என்றும், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews