யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன் கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று வருபவர்களால் மீண்டும் மலேரியா... Read more »
ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13வது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு (16) விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிட்டிய தூரத்தில்... Read more »
சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கோவிட் வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவை சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த எம்.பி.,க்களிடையே பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது வூகான்... Read more »
அமெரிக்காவில் கென்டகி மற்றும் அண்டை மாகாணங்களில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கிய நிலையில், புழுதிப் புயல் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலால் வானுயர புழுதி பறந்து சென்றுள்ளது. இதனால், நெப்ரஸ்கா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் மின்சாரம்... Read more »
புறப்பட்டு நில நிமிடங்களில் விமானம் அவரசமாக தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல இசையமைப்பாளர், மனைவி, குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று வியாழக்கிழமை குறித்த விபத்து நடந்துள்ளது. தனது இசையமைப்பு மூலம் உலகம்... Read more »
யாழ்.மானிப்பாய் – நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது. இதனையடுத்து... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 5:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று மாலை 5.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை – தம்பாட்டி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் மது போதையில் நுழைந்த பொலிஸார் வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் 17 வயது மாணவன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரின்... Read more »
யாழ்.ஊர்காவற்றுறை கடலில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. நயினாதீவு, ஜே/34 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நடராசா தர்மபாலன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. குறித்த நபர் கடந்த 9 திகதி அன்று வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் மனநலம்... Read more »