யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்:நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கு முன்னால் உள்ள தொலைபேசி கடையினை உடைத்து அங்கிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் (20) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுண்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என... Read more »

உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பகாமம் பகுதியில் 21.11.2022 இன்றையதினம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர்  இடியன் துப்பாக்கிகள்  மற்றும் ரவைகள், ஈயம் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்  முற்படுத்தப்பட்டுள்ளார் Read more »

வடக்கில் பாரிய பசுமைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

புவி வெப்பமயமாதலின் தாக்கத்தை குறைப்பதற்காக வடமாகாணத்தில் பாரிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், மேம்படுத்தப்பட்ட நீர் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் மீள் காடுவளர்ப்புத் திட்டம் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். மன்னார் – தம்ப பவனி... Read more »

பளை பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தேசிய மாவீரா்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு!

மாவீரரின் பெற்றோர், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 21.11.2022 இன்றைய தினம் பளை பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. பளை  நகரத்தில்  அமைக்கப்பட்ட மண்டபத்தில் குறித்த நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பாராளுமன்ற... Read more »

யாழில் திடீர் மூச்சுத்திணறலால் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – கிராம்புவில் பகுதியை சேர்ந்த பிறந்து 54 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (20) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்த... Read more »

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் விடுதலை

நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நெடுந்தீவு கடலினருகே கடந்த 17ஆம் திகதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரhல் எல்லை தாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால்... Read more »

13 திருத்த சட்டம் முழுமையக அழும்படுத்தப்படவேண்டும்– தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு..!

இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக இந்தியா 1987ம் ஆண்டு கொண்டுவந்த 13 வது திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிகாரங்கள் வடக்கு கிழக்கில் முழுமைப்படுத்தப்படவேண்டும். அதில் நிலம். நிதி,  சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் செயல்படுத்த வேண்டும் என  (வரதராஜ பொருமாள்) தமிழர் சமூக ஜனநாயக... Read more »

மாவீரர்கள் பெற்றோர் கிளிநொச்சியில் கௌரவிப்பு….!

மாவீரரின் பெற்றோர், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 20.11.2022 நேற்றைய தினம் கிளிநொச்சி வட்டக்கச்சியில் இடம்பெற்றது. வட்டக்கச்சி சந்தையடிப் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் குறித்த நிகழ்வு வட்டக்கச்சி ஏற்பாட்டு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.... Read more »

பருத்தித்துறையில் நினைவு மண்டபத்தில்  மாவீரர்களுக்கு அஞ்சலி….!

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி... Read more »

தொடருந்தில் மோதுண்டு மோதுண்டு 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

கண்டி – அஸ்கிரிய பகுதியில் தொடரூந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று... Read more »