சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த பிரேரணையை இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றும், நாளையும் இதற்கான... Read more »

மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாடிமிர் புடின்…!

ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடத்தப்பட்ட தேர்தலில், விளாடிமிர் புடின் 87.97% வாக்குகள் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் அதிபராக புடின் 5-ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளாா். இதன்மூலம் ஏற்கனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே... Read more »

கிழக்கு ஆளுநருக்கு வலுப்பெற்று வரும் ஆதரவு

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்   நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின் கௌரவிப்பு மற்றும் சன்னஸ்பத்ர விருது வழங்கும் நிகழ்வு நேற்று அம்பாறை, அரந்தலாவ சர்வதேச பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி... Read more »

கோப் குழுவில் இருந்து விலகினார் எரான் எம்.பி.

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் இதற்கான கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நிலையிற் கட்டளையில் மாற்றங்களை... Read more »

தமிழ் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்…!

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏதேனும் அவசர நிலையின் போது தமிழ் மொழியில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய இலக்கமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை இன்று... Read more »

எமது ஆட்சியில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு…!தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார்…!

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸதாநாயக்க இன்று(16) பகிரங்கமாக தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த மாநாடு... Read more »

மேர்வின் சில்வாவின் மகன் பிணையில் விடுதலை…!

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வர்த்தகர் ஒருவரிடம்... Read more »

அரச சார்பற்ற மற்றும் சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான கூட்டுறவு அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரி லின்டா எரிக், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (14.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி... Read more »

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள்

சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி விரைவில் நிறைவடையுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையிலேயே, அமைச்சின் செயலாளர் வியனி குணதிலக இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள... Read more »

காவல்துறையின் மோசமான செயலை கண்டிக்கிறேன்- செல்வம் அடைக்கலநாதன்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்றவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்த நிலையில் காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(14) வியாழக்கிழமை... Read more »