பளை பிரதேசத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தேசிய மாவீரா்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு!

மாவீரரின் பெற்றோர், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 21.11.2022 இன்றைய தினம் பளை பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
பளை  நகரத்தில்  அமைக்கப்பட்ட மண்டபத்தில் குறித்த நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews