மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி கோட்டாபயவினால் மறக்கப்பட்ட தமிழர்கள் –

இலங்கையின் தகவல் அறியும் உரிமை (RTI)ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் குறித்து இலங்கையில் உள்ள குடியியல் சமூக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணைக்குழுவின், முன்னைய உறுப்பினர்களது பதவிக்காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்ததையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய... Read more »

மூங்கிலாறு சிறுமி உயிரிழப்பு! – மேலும் ஒருவர் கைது –

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணமல் போன 13 வயது சிறுமி 18 ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கொலை தொடர்பில் சிறுமியின் தாய், தந்தை மற்றும் அக்கா ஆகியோரை... Read more »

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா படுகொலை சர்வதேசம் நீதிக்காக செயல்படவில்லை….!பா.அரியநேந்திரன்.

இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25. 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக்... Read more »

நொதேன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை! யாழ் மாநகர முதல்வர்…!

யாழ்ப்பாண பரமேஸ்வரா சந்தியில் இயங்கி வரும் நொதேன் சென்றல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன் தனியார் வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்பில்... Read more »

விடுமுறை வழங்காததால் விபரீதம்: அம்பாறையில் பரிதாபமாக பறிபோன நான்கு உயிர்கள்!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பொலிசார் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்... Read more »

யாழ்ப்பாணத்தலிருந்து கொழும்புக்கு பயணிகள் பேருந்தில் கடத்தப்படும் சிலைகள்! சிலை கடத்தல் மாபியாக்கள் திடுக்கிடும் தகவல்.. |

யாழ்.வலி,வடக்கு காங்கேசன்துறை, பலாலி, தெல்லிப்பழை பகுதியில் கோவில்களில் இருந்து திருடப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  இதன்படி இதுவரை 7 விக்கிரகங்கள் திருடப்பட்டிருக்கின்றது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில்... Read more »

தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவு குறித்து பேசிய சரத் பொன்சேகாவுக்கு சிவாஜிலிங்கம் கொடுத்த பதில்!

  தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவை குறித்து பேசும் சரத் பொன்சேகாவுக்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கல்வி அறிவு என்ன என்பது தொியுமா? என எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களை சந்தித்து... Read more »

கிளிநொச்சி மாவட்ட திருவள்ளுவர் விழா…..!

கிளிநொச்சி மாவட்ட திருவள்ளுவர் விழா நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற அரசியல் கைதியான செ.சதீஸ்குமாரின் வெற்றி சான்றிதழை அவரது தாயார் பெற்றுக்கொண்டார். குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் K.சிறிமோகன் தலைமையில்... Read more »

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு….!

தேசிய தொழில் வழிகாட்டல் வார விருது வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய கட்டட தொகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற... Read more »

சமஸ்டி பற்றி சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவான நடவடிக்கை தேவை….! கோசலை மதன்.

சமஸ்டி பற்றி  சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற தவறான புரிதல்களை களைவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று யாழ் பல்கலைக்கழகத்தின்  சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கட்சி... Read more »