வல்வெட்டித்துறை நகரசபைக்கு உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஸ்வரன் ஏகமனதாக தெரிவு…..!

வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் காலை 10 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் வல்வெட்டித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றுள்ளார் இதில் உப தவிசாளராக அருமைரத்தினம் சதீஷ்வரன் அமர்வில் கலந்து கொண்ட ஒன்பது ... Read more »

ஆட்டிற்க்கு குழை வெட்டிய சிறுமி பரிதாப மரணம், நெல்லியடியில் சோகம்…….!

சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று (18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை... Read more »

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு வழங்கும் சந்தர்ப்பம்.

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், வீட்டிற்கும் பரீட்சை எழுதும் மத்திய நிலையத்திற்கும் இடையில் அதிக தூரம்... Read more »

ராஜபக்சக்கள் விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் : ஹேமகுமார நாணயக்கார.

ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ராபக்சக்கள் நாட்டை சுரண்டியுள்ளனர். நாட்டின் வளங்களை விற்று சாப்பிடுகின்றனர்.... Read more »

பாட்டாளிபுரம் பகுதியில் காட்டு யானைகளால் நெற்பயிர்கள் நாசம்…..!

திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள வயல் நிலங்களை சில தினங்களாக யானைகள் துவம்சம் செய்துவருவதாக பாட்டாளிபுரம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு சுமார் 20 ஏக்கர் நெற்பயிரை  காட்டு யானைகள் முழுமையாக நாசம் செய்துள்ளன. யூரியா... Read more »

விசமிகளால் உந்துருளிக்கு தீ வைப்பு, முற்றுமுழுதாக எரிந்து நாசம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரால் உந்துருளி ஒன்றிற்க்கு  தீ மூட்டப்பட்டு  எரிக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் நேற்று முன்தினம் 16/01/2022  இரவு ஒன்பது முப்பது மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக... Read more »

அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் பாட்டாளிபுரத்தில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு…..!

அண்மைய நாட்களாக பதிவாகிய ஏழு சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களைத் தொடர்ந்து பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு இன்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இநடைபெற்றது. இதில் பாடசாலை அதிபர், சம்பூர் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தைப்பிரிவு உத்தியோகத்தர், உளவளத்துணை அலுவலர், மற்றும்... Read more »

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி… கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் கம்பவாரிதி ஜெயராஜ் ஆலோசனை…..!

தமிழ் இளைய சமுதாயத்தினரிடையே தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளைப் பெறலாம் என கம்பவாரிதி இ. ஜெயராஜ் அபிப்பிராயத்தை முன்வைத்தார். நேற்று (17) திங்கட்கிழமை கிளிநொச்சி பகுதியில் அமையவுள்ள கம்பன் கழகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... Read more »

ஏர் நிலம் அமைப்பினர் சிறப்புடன் நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா!

ஏர் நிலம் அமைப்பினர்  நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர்  ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இந் நிகழ்வில் தருமபுரம் பகுதியில் வசிக்கும் மூத்த விவசாயிகளுக்கான கெளரவிப்பு... Read more »

கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி பொது நூலக அடிக்கல் நாட்டு விழா !

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தகாலத்தில் அழிவுற்ற  பொது நூலகம் புதிதாக  கரைச்சி பிரதேச சபையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பதில் துணை தூதுவர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை முதல்வர்கள், கரைச்சி பிரதேச... Read more »