பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!

பேருந்தில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செயதுள்ளனர்.

குறித்த சம்பவம் பண்டாரவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்தினால் அப்பகுதி பாடசாலை மாணவிகள் மத்தியில் கடந்த சில காலமாக அச்சம் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் பண்டாரவளையிலிருந்து  ஹீல்ஓய வரை பயணித்த பேருந்து ஒன்றில் இருந்த மாணவி ஒருவரின் தலை முடியை வெட்ட குறித்த நபர் முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, பேருந்தில் பயணித்தவர்கள், குறித்த நபரை பிடித்து, பண்டாரவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் வசமிருந்த பயணப் பையிலிருந்து, பாடசாலை மாணவிகளுடையது என சந்தேகிக்கப்படும் தலைமுடி, கத்தரிக்கோள்  உள்ளிட்ட சில பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்

Recommended For You

About the Author: Editor Elukainews