பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் தாக்குதல்! நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயங்குவதாக குற்றச்சாட்டு.. |

பாடசாலை சென்று திரும்பிய மாணவன் மீது ரவுடிகள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டபோதும் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. என மாணவனின் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து... Read more »

தமிழக படகு மீது கடற்படை கப்பல் மோதி விபத்து. உயிருக்கு போராடிய 7 மீனவர்கள் மீட்பு…..!

நடுக்கடலில் தமிழக படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக்கப்பல் மோதி விபத்து மூழ்கிய படகில்  உயிருக்கு போராடிய 7 ராமேஸ்வரம் மீனவர்களை   சக மீனவர்களால் மீட்டு   நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் சுமார் ரூ பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம் என்று தமிழக... Read more »

யாழ்.சாவகச்சோியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 3 மாணவர்கள் நீதிவானால் எச்சரிக்கப்பட்டனர்..!

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் நேற்று 19/01/2022  எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால்... Read more »

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் பலருக்கு இடமாற்றம்!

வடமாகாண அமைச்சுக்கள், மற்றும் செயலகங்களின் செயலாளர்கள் 4 பேருக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, பேரவை செயலகம், உள்ளுராட்சி அமைச்சு, மற்றும் ஆளுநர் செயலகம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தின் பிரகாரம் கல்வியமைச்சின்... Read more »

வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு.. |

சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா... Read more »

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!

பேருந்தில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செயதுள்ளனர். குறித்த சம்பவம் பண்டாரவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்தினால் அப்பகுதி பாடசாலை மாணவிகள் மத்தியில் கடந்த சில... Read more »

யாழ்.பருத்தித்துறை கடலில் 9 மீனவர்கள் கடற்படையினால் கைது..!

யாழ். பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றய தினம் இரவு 4 படகுககளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  9 மீனவர்களே... Read more »

கருனாட்டு கேணி பாடசாலைக்கு தமிழர் தேசிய பேரவையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு……!

தமிழர் தேசியப் பேரவையின் 2022 ம் முல்லைத்தீவு மாவட்டம்   கருநாட்டுக்கேணி அ,த.க பாடசாலையின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று 19/01/2022 வழங்கிவைக்கப்பட்டன. மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டே இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூபா 130000 பெறுமதியில் 56 மாணவர்களுக்கு  மாணவர்களுக்கு  வழங்கிவைக்கப்பட்டுள்ளது.... Read more »

முகமாலை பகுதியில் மனித எச்சங்கள்,…….!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சம் காணப்படுகிறது. மனித நேய கண்ணிவடி அகற்றும் பிரிவினரால் கண்ணி வெடி அகற்றும் போதே இம் மனித எச்சம் காணப்பட்டுள்ளது. பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு... Read more »

நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு..!

நாடு முழுவதும் இன்று தொடக்கம் ஒன்றரை மணி நேரம் மின் தடை நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார பொறியிலாளர் சங்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டள்ளது. அதற்கு அமைவாக,பிற்பகல் 2.30 மணி தொடக்கம்  இரவு 9.30 மணிவரை குறித்த மின் தடை... Read more »