
பணிக்கு வராத மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியக் குறைப்பை விதிக்க தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு... Read more »

வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன.நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை,சங்கிலியன் சிலை, என்பவற்றோடு திருநெல்வேலி சந்தையில் மணிக்கூட்டுத் தூபி ஒன்று. இச்சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை கடந்த வாரக்கட்டுரையில் ஓரளவுக்குப் பார்த்தோம்.இச் சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மத அரசியலைத் தனியாயகப்... Read more »

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. குறித்த தவணை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் ஏப்ரல் 05... Read more »

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீறிச் செயற்படுவதால் அவர் ஜனாதிபதிப் பதவியை இழந்ததும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்... Read more »

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று திறைசேரியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் இந்த நடவடிக்கை நாணயமாற்று விகிதம், அந்நிய செலாவணி... Read more »

மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா களனி பிரதேச்சித்தில் தீப்பந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பியவாறும் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வாழ்வாதார செலவீனத்தை... Read more »

எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும் என, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான... Read more »

கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான இவ் பிரச்சாரத்துக்கு மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வெஸ் ஒப் மீடியா கற்கை... Read more »

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மீனவர்கள் சுருக்குவலை தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள்... Read more »

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் குறித்து அடுத்த கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது. ஏப்ரல் 25ஆம் திகதி, தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.... Read more »