தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடுகிறது

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் குறித்து அடுத்த கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது.

ஏப்ரல் 25ஆம் திகதி, தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான எந்தவொரு வாக்குச்சீட்டும் அரச அச்சுத் திணைக்களத்திடமிருந்து இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews