நெருக்கடிகளுக்கு தீர்வு தருமாறு கோரி களனி பிரதேசத்தில் தீப்பந்தப்போராட்டம் முன்னெடுப்பு

மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பஹா களனி பிரதேச்சித்தில் தீப்பந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பியவாறும் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் வாழ்வாதார செலவீனத்தை குறையுங்கள் வரிச்சுமையை குறையுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews