அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் – நளின் பெர்னாண்டோ

எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் வேதனம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும் என, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், வேதனமும் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews