யாழில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில், முன்னாள் போராளியான திரு.ஜெயசீலன் என்பவர் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார். அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டா நிமிட அக் வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் திரு.சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு.ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், திரு.ஜெசிந்தன், திரு. ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews