இரகசியமாக வெளிநாடு பறக்கும் வைத்தியர்கள் -ஏற்படவுள்ள கடும் பாதிப்பு!

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் சுமார் ஐநூறு இலங்கை வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலைமை பாரதூரமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற பல வைத்தியர்கள்... Read more »

காயங்களுடன் வீதியோரத்திலிருந்த சடலம்! பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தி வீதியோரத்திலிருந்து காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை திம்புள்ள... Read more »

ரணில் தலைமையில் கூடுகிறது அமைச்சரவை! முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைப்பெற்றுள்ளன. ஜனாதிபதி  செயலகத்தில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள், நெல் கொள்வனவு மற்றும் வரவு... Read more »

டொலர் இல்லை- துறைமுகத்தில் காத்து கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் நான்கு எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த 150 மில்லியன் டொலர்கள் இல்லாமல் அரசாங்கம் தடுமாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு டீசல் கப்பல்களும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாளை வரவுள்ளது.... Read more »

ஜெனீவா களத்தில் இலங்கைக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் முதன்முறையாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களாக அமைந்துள்ளன. பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்களில் ராஜபக்சவினர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் அதற்கு பதிலளிக்கும்... Read more »

சமந்தா பவருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!

உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவருக்கு இன்று உறுதியளித்துள்ளார். தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் உடன்பட வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படும். அவர்கள் அதனை செய்யாவிட்டால், ஒரு சர்வஜன வாக்கெடுப்பு... Read more »

மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகமரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 800 ரூபாவுக்கும் கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 400 ரூபா வரையும் அதிகரித்துள்ளது.... Read more »

இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவினால் குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்

தேசிய பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணத்தை வனவிலங்குத் திணைக்களம் இருமடங்காக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் ஒருவருக்கு ரூ.9,688 ஆக இருந்த கட்டணம் தற்போது 5,232 ரூபாவினால் அதிகரித்து 14,920 ரூபாவாக... Read more »

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தம்! மண்ணெண்ணெய் இருந்தும் சேவை இல்லை.. |

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எரிபொருள் இருந்தும் காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை செயற்படுத்துவதில்அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என மக்கள்  தெரிவிக்கின்றன. இதனால், இன்று (12) திங்கட்கிழமையும் பாதைச் சேவை இடம்பெறமாட்டாது எனத் தெரியவருகின்றது. காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவைக்கான ஒரு... Read more »

காவலாளியை கொலை செய்துவிட்டு கார் கண்ணாடியை திருடிய கும்பல்! இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்.. |

காவலாளியை கொலை செய்துவிட்டு காருக்கு பயன்படுத்தும் பக்க கண்ணாடியை திருடிய சம்பவம் நேற்று அதிகாலை நீர்கொழும்பு – தழுவகொட்டுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. கார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளியை தாக்கி கை மற்றும் வாய், கால்களை... Read more »