அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் யாழ்பாணத்தில்…!

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பவங்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை தினமான இன்று (11)மன்னார் சமூக பொருளாதார... Read more »

தமிழரசுக் கட்சி உடையுமா? – ஆய்வாளர் நிலாந்தன்

தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள்.அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை.... Read more »

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு….!

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம்... Read more »

தமிழரசுக்கட்சியின் தலமைத்துவ போட்டி காரணமாக கட்சி உடைவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது, இதனால் கூட்டு தலமையை உருவாக்குங்கள்…..! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கை.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு முகம் கொண்ட ஒரு கட்சியாகும். இடம் பெறவில்லை கட்சியின் தலமைத்துவ போட்டி காரணமாக அக் கட்சி உடையக் கூடிய வாப்புள்ள நிலையில் அதனை தவிர்ப்பதற்க்காக ஒரு கூட்டு தலமையை உருவாக்க வேண்டும் ஏன்று சமுக விஞ்ஞான ஆய்வுமையம் கோரிக்கை... Read more »

4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் சாராம்சம்…!

கௌரவ சபாநாயகர் அவர்களே ! கடந்த 2023 டிசெம்பர்  04 ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் நீதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாததத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றிய விடயங்கள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பாராளுமன்றில் அறிக்கையிட்டிருந்தார். அவரது பேச்சில் குறிப்பாக என்னை ஒரு இனவாதியாகவும்,... Read more »

மாற்றத்தை மேற்கொள்ள நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைக்கலாம் என்றும் அந்த பிரகடனத்தில், மீண்டும் கூடுவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பின் 33 வது பிரிவில்... Read more »

மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – ஆய்வாளர் நிலாந்தன்

மட்டக்களப்பு,மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில்... Read more »

வாங்காதே வாங்காதே சாராயம் வாங்காதே – அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு... Read more »

மீட்பருக்காகக் காத்திருப்பது – ஆய்வாளர் நிலாந்தன்

கடந்த புதன்கிழமை,நொவம்பர் 29ஆம் திகதி,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் உள்ள “ஆதாரம்” மண்டபத்தில் நடந்த ஒர் நிகழ்வில்,”கிளிநொச்சி உளநல வலையமைப்பு” என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. அந்நிகழ்வில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் மருத்துவர்களும் இக்கட்டுரை ஆசிரியரும் உரையாற்றினார்கள் அம்மாவட்டத்துக்குரிய உளநல ஒருங்கிணைப்பு மருத்துவரான ஜெயராஜ் நிகழ்வுக்கு... Read more »

நாட்டில் சாந்தி சமாதானம் வேண்டி பருத்தித்துறையிலிருந்து தெயவேந்திர முனைவரை நடை பயணம்……!

சிறி ஜனவரத்தனா ராமஜா, பகபராஹககந்த, அலவத்துகல குருணாகல  சேர்ந்த பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர் நாட்டில் சமாதானம் சாந்தி வேண்டி நடைபயணம் பருத்தித்துறை சக்கோட்டையிலிருந்து ஆரம்பித்துள்ளார். இன்று காலை இராணுவம் மற்றும் பொலீசார்  பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார்... Read more »