கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று… !

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி... Read more »

தனியார் காணி இன்றைய தினம் விடுவிப்பு…!

கிளிநொச்சி பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி இன்றைய தினம் விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. 2010ம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த குறித்த காணியே இன்று விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்... Read more »

குடத்தனையில் மணல் அகழ்விற்க்கு மக்கள் எதிர்ப்பு, நல்லூர் கோயிலுக்கு மட்டும் அனுமதி..!

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்றைய தினம் மணல் அகழ்வு மேற்கொள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் நல்லூர் ஆலயத்திற்க்கு மட்டும் ஆலய வளாகத்தை அழகுபடுத்த மட்டும் அறுபது உழவு இயந்திர சுமை... Read more »

கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார உறுப்பினராக அருளானந்தம் யேசுராஜன் பதவியேற்றார்…!

கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார உறுப்பினராக அருளானந்தம் யேசுராஜன் பதவியேற்றார். கிளிநொச்சி உதயநகர் வட்டாரத்தில் தமிழரசு கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வட்டார உறுப்பினர் முருகேசு சிவஞானசுந்தரமூர்த்தி விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அருளானந்தம் யேசுராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 17.06.2021 அன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து... Read more »

நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள்.இராணுவ தளபதி.!

நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள். அது குறித்து பேசாமல் நாட்டை முடக்காமல் நெருக்கடி நிலையை வெற்றி கொள்வது குடிமக்களின் கடமையாகும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.  இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,... Read more »

பல்கலை கழக ஊழியர்கள் கொரோணா அபாயம் காரணமாக வீடுகளில் இருந்து பணியாற்ற கோரிக்கை…!

கொரோனா பரவல் அபாயம் தீவிரமடையும் நிலையில் யாழ்.பல்கலைகழக ஊழியர்களை பணிக்கு செல்லாது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும்,  கல்விசார் ஊழியர்களின் செயற்பாடுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன் கோரியுள்ளார். இது குறித்து ஊழியர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்... Read more »

யாழ்.கொடிகாமம் பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

யாழ்.கொடிகாமம் பகுதியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். கொடிகாமம் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக எழுமாற்று பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது. இதன்படி நேற்றய தினம் எழுமாற்று பரிசோதனையில் 5 பேருக்கு... Read more »

வடக்கின் உயர்நிலை அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று! |

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனா கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மாகாணத்தின் உயர்நிலை அதிகாரிகள் மேலும் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.  இதேபோல் வடமாகாண பிரதம செயலாளரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் வடக்குமாகாண சமூக... Read more »

கொரோணாவால் யாழில் நேற்று மூன்று மரணங்கள்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும், சுன்னாகம் பகுதியை சேர்ந்த 56 வயதான யாழ்.பல்கலைகழக ஊழியர்... Read more »

மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த வயோதிப பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று.!

யாழ்.கொடிகாமம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த வயோதிப பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. சம்பவத்தில் குறித்த பெண்... Read more »