2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை தொட்பில் வெளிவந்த அறிவிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி நாளை மறுதினம் தேசிய போராட்ட தினமாக பிரகடனப்படுத்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலகம் முன்பாகவும் இந்தப் போராட்டம் நடாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews