போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாததாலேயே கொலை செய்தேன்! சந்தேகநபர் வாக்குமூலம்….!

போதைப் பொருள் வாங்குவதற்குப் பணம் இல்லாததாலேயே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும்... Read more »

வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா..!

யாழ்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் இம்முறை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”... Read more »

3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட கட்டணம்.. |

நாட்டில் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 14 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 17 ரூபாயாக உயரும் என கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... Read more »

பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் துரித கதியில்! மாவட்ட செயலருக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வழங்கிய பணிப்பு.. |

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதியிடப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து குறித்த... Read more »

பாம்பு தீண்டியதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் 10 நாட்களின் பின் உயிரிழப்பு!

பாம்பு தீண்டியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது.... Read more »

நிறைபோதையில் கடமையில் இருந்த இரு பொலிஸாருக்கு நடந்த சம்பவம்! யாழ்.கொடிகாமத்தில்.. |

பணியின்போது மதுபோதையில் காணப்பட்ட கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை... Read more »

கண்திறந்த அய்யப்ப சுவாமி சிலை!! -பக்தர்கள் எடுத்த வீடியோவில் பதிவானதால் பரபரப்பு- |

இந்தியாவின் கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. குறித்த கோவிலின் உள்ளே அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த கோயிலில் 40 ஆம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு... Read more »

ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி!! -குற்றவாளி செருப்பால் எறிந்ததால் பரபரப்பு- |

குஜராத் மாநிலம் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது குற்றவாளி செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தில் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பலி: இருவர் காயம்! –

தம்புள்ளை – களுந்தேவ – பரணகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதிக் கால்வாயில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது.இரண்டு மோட்டார் சைக்கிளில் ஆறு மாணவர்கள் நேற்று... Read more »

பிரபாகரனை விட ராஜபக்ஷக்களே நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளனர்: சம்பிக்க –

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.‘துறைசார் நிபுணர்களையும், திறமையானவர்களையும் அமைச்சுக்களின் செயலாளர்களாகவும், அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்க முடியாத... Read more »