போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாததாலேயே கொலை செய்தேன்! சந்தேகநபர் வாக்குமூலம்….!

போதைப் பொருள் வாங்குவதற்குப் பணம் இல்லாததாலேயே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஒரு சோடி தோடு, ஒரு சோடி காப்பு,

சங்கிலி ஒன்று, 2 மோதிரங்கள் ஆகிய ஆபரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய 67 வயதான பெண் காணாமல் போன நிலையில் சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டு, வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கபட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டிருந்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews