மூன்று மாதங்களின் பின் நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர்-வரவேற்கும் மக்கள்

கடந்த மூன்று மாதங்களாக வைத்தியர் அற்று செயற்பாடற்றுக் காணப்பட்ட வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,நித்தியவெட்டை,போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறித்த வைத்தியசாலையை நம்பியே இதுவரை வாழ்ந்து வந்தனர். பணியாற்றிய வைத்தியர் திடீர் இடமாற்றம் பெற்றுச் சென்றதால்... Read more »

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால் இவ்வாறான மோசமான வீதியால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல இன்னல்களையும்... Read more »

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள்

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் வைத்தியர் Dr.N.Narendran தலைமையில் இன்று இடம்பெற்றது. காலை 09.00 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் இரத்தவங்கியில்... Read more »

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மாகாண டெங்கு... Read more »

எழுகை நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம்  ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன்... Read more »

தரக்குறைவான ஊசியாலும் சரியான சிகிச்சை இன்மையாலுமே சுபீனா உயிரிழப்பு – சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு…!

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.   யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை... Read more »

செல்வபுரம் உதயசூரியன் முன்பள்ளியில் நடைபெற்ற உணவு மற்றும் கைவினை பொருட்களின் கண்காட்சி….! 

உதயசூரியன் முன்பள்ளி மற்றும் உதயசூரியன் தாய்மார்கழகம் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச பொது வைத்திய அதிகாரி வைத்தியர் சிவசங்கரி அவர்களும், உரும்பிராய் சமூக மேம்பாட்டு ஒன்றிய தலைவர் வைத்தியர் கணேசவேல் அவர்களும், கோப்பாய் கோட்ட முன்பள்ளி இணைப்பாளரும், உரும்பிராய் முன்பள்ளி கொத்தணி... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும்  அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு….!  

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இன்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு  இடம்பெற்றுவருகிறது. வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட... Read more »

சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக்குகள் அனைத்தும் இடமாற்றம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை (16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு... Read more »

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »