யாழ்.மாவட்டத்திலுள்ள வெதுப்பக உரிமையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள்! மாவட்ட செயலர் உத்தரவாதம்.. |

யாழ்.மாவட்டத்திலுள்ள வெதுப்பக உரிமையாளர்களுக்கு அவர்களது சங்கங்கள் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  எரிபொருளை வழங்க யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் நடவடிக்கை எடுத்துள்ளார்.  நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலாளருக்கும் வெதுப்பக உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே மாவட்ட செயலர் மேற்படி உறுதியை வழங்கியுள்ளார். இதன்போது... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மீண்டும் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்..!

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இம்மாத நிறைவில் மீண்டும் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதேவேளை தற்போது பதில் பணிப்பாளராகக கடமையாற்றும் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் மீண்டும் பிரதம மகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையைத் தொடர உள்ளார். லண்டன்... Read more »

கிளிநொச்சி யாழ்ப்பாணம் புகையிரதம், கட்டணம், நேரம் வெளியீடு….!

யாழ்ப்பாணம்  – கிளிநொச்சி இடையே யாழ்ராணி புகைரத சேவை நேற்று உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ்.ராணியின்  காலை 6 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில்  6.40க்கு யாழ் புகையிரத நிலையத்திலிருந்தும், 7 மணிக்கு சாவகச்சேரியிலிருந்தும், 7.12க்கு கொடிகாமத்திலிருந்தும் புறப்பட்டு  பளையை 7.30க்கும், கிளிநொச்சியை 7.56க்கும்,... Read more »

யாழ்.சங்கானையில் பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ்.சங்கானை பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் “நான் உங்களுக்கு தொந்தரவாக இருப்பதற்கு விரும்பவில்லை” என்றும் உறவினர்களுக்கு கூறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலமானது யாழ். போதனா... Read more »

இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி.. இந்திய இராணுவம் குறித்த செய்திகளை மறுக்கிறோம் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் |

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை திட்டவட்டமாக மறுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தொிவித்துள்ளதுடன், அது இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போனதல்ல எனவும் கூறியுள்ளது. இதேவேளை கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். “சட்டபூர்வமான... Read more »

மட்டு. மகிழூர் குளக்கட்டு அன்னை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர் அருள்மிகு குளக்கட்டு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு பெருவிழாவின் தீ மிதிப்பு நிகழ்வு நேற்றிரவு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ஆலயத்தின் இவ்வருடத்திற்கான சடங்கு கந்த 2022.07.06 ஆம் திகதி ஆரம்பமாமாகியது. தொடற்சியாக 8 நாட்கள்... Read more »

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டுச்செல்ல முயன்ற 78பேர் கைது.

மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 78 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கிழக்கு கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல்களின் போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பலநாள்... Read more »

நிராயுத பாணியாக, பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்:கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்.

மக்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும், அறிந்து கொள்ளும் உரிமைக்கு மதிப்பளித்துவரும் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், லஞ்சம் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதானது இயலாமையின் வெளிப்பாடு என கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன... Read more »

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: விசேட அதிரடிப்படை அதிகாரி பணி இடைநிறுத்தம்!

நாட்டில் கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை... Read more »

மட்டு.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்ட்களப்பு மாவட்ட கிளை தெரிவித்துள்ளது. எரிபொருள் வழங்கப்படாமையால் கடமைகளை மேற் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் கொள்வதாகவும் சமுர்த்தி... Read more »