மட்டு.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்ட்களப்பு மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.

எரிபொருள் வழங்கப்படாமையால் கடமைகளை மேற் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் கொள்வதாகவும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை வழங்குமாறும் அத்தியாவசிய சேவைக்குள் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உள்வாங்குமாறு கோரியும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லாததால் சமுர்த்தி வங்கிகளில் வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அத்துடன் சமுர்த்தி மகா சங்கத்தின் வேலைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

சமுர்த்தி அபிவிருத்தி அபிவிருத்தியோகத்தர்களு;ககு எரி பொருள் வழங்கப்படாததால் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விஷேட கொடுப்பனவு வழங்குவதிலும் பாரிய சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews