மட்டு.ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்.

மட்டக்களப்பு லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தின் ஊடாக வைத்தியசாலை சேவையில் ஈடுபடும் நோயாளர் காவுவண்டிகள் , பொலிஸார் ,பொதுமக்கள், முச்சக்கர வண்டிகள் என அனைவருக்கும் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.

லங்கா ஐ ஓ சி திருகோணமலை நிலையம் எல் ஐ ஓ சி எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருளை அனுப்ப 24 மணி நேரமும் இயங்கும் என நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ஐ ஓ சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானோர் எரிபொருள் நிலைய பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews