யாழ்.மாவட்டத்திலுள்ள வெதுப்பக உரிமையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள்! மாவட்ட செயலர் உத்தரவாதம்.. |

யாழ்.மாவட்டத்திலுள்ள வெதுப்பக உரிமையாளர்களுக்கு அவர்களது சங்கங்கள் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில்  எரிபொருளை வழங்க யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் நடவடிக்கை எடுத்துள்ளார். 

நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலாளருக்கும் வெதுப்பக உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே மாவட்ட செயலர் மேற்படி உறுதியை வழங்கியுள்ளார்.

இதன்போது கருத்து தொிவித்த மாவட்டச் செயலர் யாழ்ப்பாணம் – நல்லுார் பகுதிகளில் உள்ள தொிவு செய்யப்பட்ட வெதுப்பக உரிமையாளர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றய பிரதேசங்களில் உள்ள வெதுப்பக உரிமையாளர்களுக்கும் அவர்களின் சங்கங்கள் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews