யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மீண்டும் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்..!

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இம்மாத நிறைவில் மீண்டும் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதேவேளை தற்போது பதில் பணிப்பாளராகக கடமையாற்றும் வைத்திய கலாநிதி க. நந்தகுமாரன் மீண்டும் பிரதம மகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையைத் தொடர உள்ளார்.

லண்டன் சென்றுள்ள வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி 2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வருவதுடன்  சுகாதார அமைச்சினால் மருத்துவமனைக்கான நிரந்தரப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது ஒருவருட கால வெளிநாட்டு மேற்படிப்புக் காலப்பகுதியில்  நாட்டில் கொரோனா தொற்றுத் தீவிரமாகியிருந்தது. இந்நிலையில் அவர் நாடு திரும்பி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையைப் பொறுப்பேற்று அனைத்துத்தரப்பினரதும் ஒத்துழைப்புடன்  இடர்கால முகாமைத்துவத்தை சிறந்த முறையில் செயற்படுத்தியிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews