சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டுச்செல்ல முயன்ற 78பேர் கைது.

மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 78 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கிழக்கு கடற்படையினர் நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல்களின் போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டடனர்.

இதன்போது கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 61 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில்; மோசடியில் ஈடுபட்ட 06 நபர்கள் உட்பட 43 ஆண்கள் 07 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள்அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சட்டவிரோத கடல் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்

மட்டக்களப்புக்கு அப்பால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் இன்று காலை விரைவுத் தாக்குதல் கப்பல் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதேவேளை மீன்பிடி இழுவை படகுடன் ஏனைய 40 பேரும் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள காஷ்யபா மற்றும் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்றிரவு மட்டக்களப்பு களுவான்கேணி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

மேற்கூறிய மீன்பிடி இழுவை படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு குடிபெயரும் நோக்கத்துடன் கடற்கரையில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 17 நபர்களை ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 22 முதல் 50 வயதுக்குட்பட்ட 16 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு வேனையும் கைப்பற்றினர்.

களுவான்கேணியில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வேனுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews