பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்!

தொடர்ச்சியாக, சவால்களையும் இடர்களையும் சந்திக்கும் நிலையில், பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே, தமிழ் மக்கள், தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஆர.வீ.சசிகரனின் படைப்பில் உருவான, உனக்கும் உதிரம்தானே குறும்பட... Read more »

இழப்பீட்டு தொகையில் 2.15 மில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது!

இலங்கை கடற்பரப்புக்குள் கடந்த வருடம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மூலமாக ஏற்பட்ட சேதங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட இழப்பீட்டு தொகையின் முதல் தவணை பணம், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப் பெறவுள்ளதாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி... Read more »

வடமராட்சி கிழக்கில் பட்டப் போட்டி.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் சிறுவர்களுக்கான பட்டப் போட்டி இடம்பெற்றுள்ளது. நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெற்ற போட்டியில் ஒன்பது பட்டங்கள் போட்டியில் பங்கு கொண்டன. நாகர்கோவில் கிராமத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற இப் பட்டப் போட்டியில் முதலாம் பரிசான... Read more »

நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என... Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,164 பேருக்கு எச்சரிக்கை.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1164 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மேல் மாகாணத்தில் 762 பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது... Read more »

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவு.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில்   இடம்பெறும் பல்வேறு குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான செலவீனமும் இந்த 90 மில்லியனுக்குள் உள்ளடங்குவதாக தகவல்கள்... Read more »

இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளது. எம் ஏ சசுமந்திரன் பா.உ….!

இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று தனது வடமராட்சி தொகுதி  அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றய தினம் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள்... Read more »

வீடொன்றுக்குள் வாள்கள், கம்பிகளுடன் புகுந்த ரவுடிகள் அட்டகாசம்!

யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு... Read more »

யாழ்.மாதகலை சேர்ந்த சிற்றுார்தி சேவை சாரதி சங்கானையில் சடலமாக மீட்பு!

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... Read more »