தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,164 பேருக்கு எச்சரிக்கை.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1164 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மேல் மாகாணத்தில் 762 பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 3221 மோட்டார் சைக்கிள்கள், 2052 முச்சக்கர வண்டிகள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் 6568 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1164 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin