பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்!

தொடர்ச்சியாக, சவால்களையும் இடர்களையும் சந்திக்கும் நிலையில், பண்பாடுகள், கலைகளின் வெளிப்பாடுகள் மூலமே, தமிழ் மக்கள், தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ஆர.வீ.சசிகரனின் படைப்பில் உருவான, உனக்கும் உதிரம்தானே குறும்பட இறுவெட்டு வெளியீட்டு விழா, இன்று, கிளிநொச்சியில் அமைந்துள்ள, இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்ற போது, இவ்வாறு குறிப்பிட்டார்.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் தேவஸ்தான நிர்வாகத்தைச் சேர்ந்த செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin