குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று  (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

சபாநாயகருக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி – வெளியாகியுள்ள தகவல்.

இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகருக்கு கடும் நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதி சபாநாயகரை நியமிப்பதா அல்லது தற்போது ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதா என்பதை சபாநாயகர்... Read more »

முள்ளிவாய்க்காலில் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 03.05.2022 இடம்பெற்றுள்ளது. திருகோணமலையினை சேர்ந்த 37 அகவையுடைய பிரதாப் என்ற இளைஞர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காலில் வாடியில் தங்கி நின்று தொழில் செய்துவந்துள்ளார். குறித்த நபருக்கு வலிப்பு... Read more »

உயிர் பயத்தில் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள்.

இலங்கையில் வடக்கு,கிழக்கினை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று நேறு்று... Read more »

அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடி – எதிர்க்கட்சியில் அமரத் தயாராகும் முக்கிய நபர்.

ஆளும் கட்சியின் பலமான உறுப்பினர் ஒருவர் இன்று எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகளை உருவாக்கி வரும் குறித்த உறுப்பினர் மூத்தவராக அறியப்படுகிறார். இந்த உறுப்பினர்... Read more »

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பௌத்த பிக்குகள்.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையை பெருமளவான பிக்குமார் திடீரென சுற்றிவளைத்தமையினால் அமைதியின்மை நிலவியுள்ளது. கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்த பெருமளவான பௌத்த பிக்குமார்கள் மத்திய வங்கிக்கு முன்பாக உள்ள நுழைவாயிலை திறந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு பிரவேசிக்க... Read more »

இத்தாலி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஐவர் கைது!

போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45... Read more »

கிழக்கு பல்கலைக்கழக விவகாரம்! பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ம் திகதி அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்துள்ளார். சுவாமி விபுலானந்தா... Read more »

மகிந்தவின் பதவி விலகல் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியாகியிருந்த போதிலும், பிரதமர் பதவி விலக மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மற்றும்... Read more »

மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130ஆவது ஜனன தின நிகழ்வு.

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வானது நேற்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுசுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு... Read more »