பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more »
எமது நாடு வெனிசுலா, லெபானான் நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டு முடிந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது.... Read more »
நாட்டின் பிரச்சினையை ஒரு மாத்தில் தீர்க்க முடியும் என கூறினால் நான் பைத்தியகாரன் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (04) விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்களுக்கும்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டி சேர்ந்த மயூரன் மகிந்தன்(வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தவேளை மயங்கி... Read more »
நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும் அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான யோசனையை... Read more »
பாராளுமன்ற நுழைவு வாயிலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பாளர்கள் பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, எதிர்ப்பாளர்கள்... Read more »
சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் அமைக்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து கிராம சேவையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக கட்டட வேலைகளை நிறுத்தி அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவமானது நேற்று மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.... Read more »
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய பிரதரம போரிஸ் ஜோன்சன் இதனை தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக உக்ரைன் நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா பெப்ரவரி 24ம் திகதி தாக்குதலை... Read more »
ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையினால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு கார்கிவ் பிராந்திய ஆளுநர் எச்சரித்துள்ளார். கார்கிவ் ஆளுநர் Oleh Synyehubov சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், கார்கிவ் பிராந்தியத்தில் குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து மிகவும் அதிகம். முடிந்தவரை... Read more »
சுதந்திரத்திற்காக போராடும் ஒரு நாட்டை டாங்கிகளாலும் துப்பாக்கிகளாலும் அடக்க முடியாது என்பதை உக்ரேனியர்கள் தங்கள் விடாமுயற்சி மற்றும் தியாகத்தால் நிரூபித்துள்ளனர் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என... Read more »