இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 28, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟮𝟴 🇮🇳꧂_* *_🌼வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆𝟭𝟭𝟬𝟰𝟮𝟬𝟮𝟱🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.... Read more »

பிரித்தானியாவின் தடை விவகாரம்,  ஒரு நாட்டுக்குள்ளேயே சிங்கள தேசமும்,  தமிழத்தேசமும்,  வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்தமை சமூகமளவில் இலங்கை இரண்டாகவே உள்ளது…! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

பிரித்தானியாவினாவின்  தடை விவகாரத்தில் ஒரு நாட்டுக்குள்ளேயே சிங்கள தேசமும்,  தமிழத்தேசமும்,  வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்தமை சமூகமளவில் இலங்கை இரண்டாகவே உள்ளது என அரசியல் ஆய்வாளரும்  சட்டத்தரணியுமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் தனது அரசியல் ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்டாவது.... Read more »

அதிவிரைவு டோரா படகுடன் இணைந்து கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு-6 பேர் கைது.!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் கடற்பகுதிகளில் ஒளிப்பாய்ச்சி  சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6பேர் 5 படகுகளுடன்  இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் நேற்று (9) இரவு தொடக்கம் இன்று (10) காலை வரை வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை,வெற்றிலைக்கேணி,சுண்டிக்குளம் ஆகிய நிலம்... Read more »

பொய் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது – ஆதரவாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஈ.பி.டி்பியின் மாவட்ட நிர்வாக செயலாளர் கோரிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் என்ற அடிப்படையில் சில விடயங்களை எமது மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்... Read more »

82 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது..!

இலங்கை கடற்படை, காவல்துறையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 09 அன்று நீர்கொழும்பின், பிடிபன பகுதியிலும் கொழும்பின் கெசல்வத்த பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று ஐந்து (205) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு (958) கிராம் கேரள கஞ்சாவை... Read more »

காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம்-வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவளத்... Read more »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை..!

வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை இன்று(10) வெளியிட்டுள்ளது அதில் யாழ்ப்பாண கடலை ஆக்கிரமிக்கும் சீன கடலட்டை பண்ணைகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக குரல்... Read more »

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா.!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவானது இன்று (10) அம்பிகையின் பக்தர்களின் பேராதரவுடன் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 5.00 மணிக்கு மூலஸ்தான பூஜையும், தம்ப பூஜையும், 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும்... Read more »

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது..!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SAHYADRI’ என்ற கப்பல் தீவைவிட்டு புறப்பட்டது..!

2025 ஏப்ரல் 04 ஆம் திகதி அதிகாரப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் ‘INS SAHYADRI’ நேற்று (2025 ஏப்ரல் 07) தீவை விட்டு புறப்பட்டதுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பலுக்கு இலங்கை கடற்படை பாரம்பரிய முறையில் கடற்படையினர் பிரியாவிடையளித்தனர். மேலும், இந்தக்... Read more »