யாழ்.வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்றய தினம் இரவு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வைத்தியசாலையில் பணிசெய்யும் தாதியர் ஒருவருடைய அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் வைத்தியசாலையின் பணம் என்பன இவ்வாறு... Read more »
கொவிட்-19 புதிய பிறழ்வான ஒமிக்ரோன் நாட்டிற்குள் ஏற்கனவே நுழைந்திருக்கலாம். என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் மரபணு வரிசைமுறைக்கு உட்பட்டாலன்றி மாறுபாட்டையுடைய ஒமிக்ரோன் நோயாளர்களை அடையாளம்... Read more »
பெருங்கற்கால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆனைக்கோட்டை – கரைப்பிட்டி மயானத்தில் மண் அகழ்வுகளால் தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படும் நிலையில் மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வலி,தென்மேற்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ இந்த பிரேரணையை சபையில் முன்வைத்த நிலையில் சபை... Read more »
பருத்தித்துறை நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் நீதிமன்றக் வாயில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அவர் மீது துப்பாக்கியைக் காண்பித்து பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்தினார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச்... Read more »
யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது . இன்று மாலை 5.30 மணிக்கு யாழ் மாநகர முதல்வரின் அவர்களின் தலைமையில்... Read more »
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களுக்கும் விஜயம் செய்துள்ளார். இந்தியாவுக்கான தனது முதல்நாள் விஜயத்தின்போது பசில் ராஜபக்ஷ சுலப் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் விஜயம் செய்திருந்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர... Read more »
2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள்... Read more »
சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று வீடுகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்நிலையில், சமையல் எரிவாயுடன் தொடர்புடைய அனர்த்தங்கள் இடம்பெற்ற கொட்டாவ, அத்துருகிரிய ஆகிய பகுதிகளில் உள்ள... Read more »
இலங்கையில் காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர... Read more »
அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் திரிபான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றுடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்த ஒருவருக்கே... Read more »