மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை பெற்றக்கொள்ள நடவடிக்கை.

10 மில்லியன் குவைட் தினார்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மொரட்டுப் பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கு நிதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திட்டத்தக்கு 10 மில்லியன் குவைட் தினார்களை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews