
வவுனியா வடக்கு கனகராயன்குளம், பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தங்கோடை காரைநகரை சேர்ந்த அமரர்களான கனகலிங்கம்- பத்மாவதி நினைவாக அவர்களின் குடும்பத்தினரின் ரூபா 1950000/- பெறுமதியில் வீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டு இன்று மதியம் சுப நேரத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், மற்றும் வீட்டுத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பாளர் ஆகியோர் சம்பிர்தாயபூர்வமாக திறந்துவைத்தனர்.













இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டதுடன், தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நடுகல் திரை நீக்கம் செய்யப்பட்டு சம்பிர்தாயபூர்வமாக வீடு திறந்துவைக்கப்பட்டு பால் காய்ச்சப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையிலான தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர் இ.தயாபரன் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்