சந்நிதியான்  ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்,சி சந்நிதியான் ஆச்சிரமத்தால்  மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்துக்கு  ரூபா 650,000 பெறுமதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  பொறித் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டு அது  நேற்று பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குடிநீர் பொறி தொகுதி பொருத்தப்பட்டு சம்பிர்தாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு... Read more »

அன்னதான அறப்பணிகளை 30. ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மோகன் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்….!

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு செல்லும்  அடியவர்க்கெல்லாம் பசி போக்குதல், மற்றும் ஆண்மீக அறப்பணிகளை தினந்தினம் ஆற்றிக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்வதுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடியார்க்கு அன்னதானம் வழங்கும்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கல்விச்சுற்றுலாவிற்க்காக உதவி……!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் சுற்றுலா மற்றும் திருத்தல யாத்திரைக்கான நிதி உதவியாக ரூபா 100,000 நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், சைவசித்தாந்தத்துறை மாணவர்களின் கல்விச்சுற்றுலா, மற்றும் திருத்தல யாத்திரைக்காகவே குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம் செஞ்சோலை மாதிரி கிராமம்,தேறாங்கண்டல் மக்களுக்கு பல இலட்சம் பெறுமதியான உதவி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்   செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப் பொருள்கள்  12.08.2023 நேற்று வழக்கி வைக்கப்பட்டுள்ளன. செஞ்சோலையில் வளர்ந்து தற்போது  கிளிநொச்சி –  மலையாளபுரத்தில் உள்ள செஞ்சோலை மாதிரி கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் ... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மலையகத்திற்க்கு பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செ்வ  சந்நிதியான் ஆச்சிரமம் –  மலையக மக்களுக்கு 813,000 ரூபா பெறுமதியான பல்வேறு உதவிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. இதில்  தெமோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு  200,000 ரூபா பெறுமதியான கற்றல்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு……!

யாழ்ப்பாணம் வடமராட்சி செலவச் சந்நிதியான் ஆச்சிரமத்தால்  357,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் ஏழு மாணவர்களுக்கு நேற்று 05/5/2023   வழங்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் வைத்தே திவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. கலைமதி வீதி, புத்தூரை சேர்ந்த தரம்-07 மாணவிக்கும்,... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா…!

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த திருவாசக விழா நேற்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவம், திருவாசக ஏடுகள் ஆலயத்திலிருந்து திருவாசக பாராயணத்துடன் ஊர்வலமாக ஆச்சிரமத்துக்கு எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. திருவாசகம் தொடர்பாக ஒய்வுநிலை அதிபர் த.ஆ.சிவநாதன்.... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆறுமுகநாவலர் 200ஆவது ஆண்டு நிறைவு விழா…!

வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆறுமுகநாவலரின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது. முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவம் பல்லக்கில் ஆ. சிவநாதன் தலைமையில் செல்வச்சந்நிதியான்  ஆலயத்திலிருந்து ஊர்வலமாநசல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் வரை  எடுத்து வரப்பட்டு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் மானிப்பாய்  பெரியதம்பிரான் ஆலயத்திற்க்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்…!

மானிப்பாய் –  சைவபரிபாலன அறநெறிமன்றம் மற்றும் பெரியதம்பிரான் ஆலயத்திற்கான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்க்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று  வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூஒஅ 450000 பெறுமதியான குறிதஸத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்... Read more »

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஆன்மீகச் செயற்றிட்ட  உதவிகள் –

அம்பாறை மாவட்டம்  –  பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக 50000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன்  பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரிடம்  பிள்ளையார்... Read more »