இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை விடுவிக்க கோரிக்கை.(வீடியோ)

இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உடனடியாக இழுவை மடி தடை சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   இன்று வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு, சங்கங்களின் சமாசத்தில் இடம் பெற்ற... Read more »

இந்திய தூதுவருக்கும் இரா.சம்பந்தனிற்கும் இடையில் அவசர சந்திப்பு!

இந்தியத் தூதுவர் கோபால் பால்கிலே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் இன்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இச் சந்திப்பில் தூதுவர் கோபால் பால்கிலேயுடன்  அவரது அதிகாரியும் இரா.சம்பந்தனுடன்... Read more »

பிள்ளைகளைகொன்ற பின் ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்.

இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.... Read more »

ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம்.

உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவரும் ஜப்பானில் அணு ஆயுதங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டவருமான சுவானோ சுபோய் தமது 96-ஆம் வயதில் மரணமடைந்தார். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி சுனாவோ சுபோய் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அன்றுதான்... Read more »

அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம்.

அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட... Read more »

வெலிக்கடைக் கைதிகளின் போராட்டத்தால் ஒரு கோடி ரூபா நட்டம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக செப்பல் பிரிவின் கூரைக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தால் சுமார் ஒரு கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது. பொருள் சேதத்தை விளைவித்தமை தொடர்பில் சிறைக் கைதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள்... Read more »

ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் போராட்டம்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பளமுரண்பாட்டை நீக்ககக்கோரி இன்று அதிபர் ஆசிரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டமானது. வேலணை சரஸ்வதி வித்தியாசாலை முன்பாக நடைபெற்றது . அரசுக்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு அதிபர்கள்... Read more »

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு! மாவட்ட அரச அதிபர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி  கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்  தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொவிட்  தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள நிலையே... Read more »

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு 31 அதிகாலை நீக்கம்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதி அதிகாலை நீக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட் செயலணியில் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது. பொது... Read more »

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்கள் நியமனம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பயிற்சி மருத்துவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் திலீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனனும், சிறப்பு விருந்தினர்களாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »