நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என... Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,164 பேருக்கு எச்சரிக்கை.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1164 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மேல் மாகாணத்தில் 762 பொலிஸார் இணைந்து நேற்றைய தினம் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது... Read more »

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவு.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உணவுக்காக 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில்   இடம்பெறும் பல்வேறு குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான செலவீனமும் இந்த 90 மில்லியனுக்குள் உள்ளடங்குவதாக தகவல்கள்... Read more »

இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளது. எம் ஏ சசுமந்திரன் பா.உ….!

இந்த ஆட்சி ஏற்கனவே கவிழ்ந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று தனது வடமராட்சி தொகுதி  அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்... Read more »

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்பு!

தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்றய தினம் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் நடத்திய ஆய்வுகளில் இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள்... Read more »

வீடொன்றுக்குள் வாள்கள், கம்பிகளுடன் புகுந்த ரவுடிகள் அட்டகாசம்!

யாழ்.ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, ஓட்டுமடம் – காக்கைதீவு வீதியில் ஒரு இளைஞரை மற்றொரு... Read more »

யாழ்.மாதகலை சேர்ந்த சிற்றுார்தி சேவை சாரதி சங்கானையில் சடலமாக மீட்பு!

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு... Read more »

யாழ்.புத்துாரில் இரு சக்கர உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..!

யாழ்.புத்துார் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்தபோது உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் உயிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் உயிரிழந்தவர் புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி... Read more »

யாழ்ப்பாணத்திலுள்ள வன்முறை குழு ஒன்றின் சூத்திரதாரி யாழ்.சுன்னாகம் பொலிஸாரினால் கைது..! |

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர். வன்முறை சம்பவங்கள் பலவற்றின் சூத்தரதாரியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நிலையில்  சுன்னாகம் பிரதேசத்தில் நடமாடுகிறார் என பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சந்தேகநபர்... Read more »

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தடை….!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அந்த கட்சியால் மேற் கொள்ளபட்ட இடை நிறுத்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் மணிவண்ணன் ஆதரவாக செயற்பட்டமையாலேயே அவர்கள் கட்சியிலிருந்தும்... Read more »