உலக நாடுகளுக்கு ஆபத்தாக மாறிவரும் பயங்கர உயிர்க்கொல்லி ‘நியோகோவ்’ வைரஸ்.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ்... Read more »

சூடுபிடிக்கும் பொரளை கைக்குண்டு விவகாரம்! பிரதான சந்தேகநபரின் மகன் வெளியிட்டுள்ள தகவல்.

கொழும்பு – பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு கைப்பற்றிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கமைய, கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்,ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த கைக்குண்டை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்,கர்தினால்... Read more »

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவிப்பு.

முதலமைச்சர் கதிரைக்கு நாம் ஆசைப்படவில்லை என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரான காண்டீபன் மற்றும் சட்டத்தரனி சுகாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற 13வது திருத்தத்திற்கு எதிரான வாகன ஊர்தி பிரசாரத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளனர். அவர்கள்... Read more »

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது: மாவை சேனாதிராஜா

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களைக் குழப்புவதற்காகப் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை... Read more »

அங்கஜன் அதிகார வரம்பை மீறி நடக்கின்றார்: இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கம் கண்டனம்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் செல்வ குணபால செல்வத்தைப் பல அதிகாரிகள் முன்னிலையில் எச்சரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய தொழிற்சங்கத்தின் தலைவர் புவிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்... Read more »

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக நேற்றைய தினம் ஊர்காவற்றுறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்றுறை சந்தியில் இருந்து ஆரம்பித்த போராட்டம் பேரணியாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தை வந்தடைந்தது. போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நண்டு பதனிடும் கம்பனி ஊழியர்களும்... Read more »

அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள். யோகராசா கனகரஞ்சினி.

அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தவைலி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியுள்ளதாக  தர்மபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன்இ அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை  தொடர்பில் தரும்புரம்  போலீஸ்... Read more »

ஓருலைப் பொங்கல் அல்வாய் வடக்கில் சிறப்பாக  இடம் பெற்றது.

சமூக விஞ்ஞான அய்வு மையம், மற்றும் நாம் செய்வோம் அமைப்பும் அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்களும் இணைந்து ஓருலை பொங்கல் நிகழ்வை நேற்று நடாத்தியுள்ளனர். பிற்பகல் நான்கு மணிக்கு அல்வாய் வடக்கு மாகாத்மா வீதி சந்தியிலிருந்து சிவகுரு ஆதீன குரு முதல்வர் வணக்கத்திற்குரிய... Read more »

கல்விகற்றலை நிறுத்தி மைதானத்தில் கூட்டப்பட்ட மாணவர்கள்……!

நீதிக்கான அணுகல்” எனும் தொனிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினால் விளையாட்டு மைதானத்தில் கூடவேண்டிய  நிலைக்கு மாணவர்கள் நேற்றைய தினம் தள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று ஆரம்பமான நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்று வந்த நிலையில்... Read more »