வட மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரிக்கு கௌரவிப்பு

பணியி இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் விசேட  அதிரடிப் படையினர் வட மாகாண  கட்டளை அதிகாரி டிடிடிகே ஹெட்டியாராச்சியை கௌரவிக்கும் நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கட்டுப்பாட்டு பிரதிநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை யாழ் கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்... Read more »

சர்வதேச விருதுகளை பெற்ற இயக்குனர் மதுசுதன் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை கௌரவிப்பு

ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் எமது மக்களின் வலிகளை 16 நாடுகளுக்கு கொண்டு சென்று 29 சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற நேபாள அரசின் கலாச்சார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதை இயக்கிய மதிசுதா அவர்கள் அழைத்துக்... Read more »

அரச பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள்!

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ்ஸில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தலைமன்னாரில் இருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் அரச பஸ் பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்தது. இதன் போது இரவு 8 மணியளவில்... Read more »

பணம் மீளப்பெறல் இயந்திரங்களை உடைத்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் கொள்ளை

காலி, ஹிக்கடுவை, பத்தேகம நகரங்களில் உள்ள மக்கள் வங்கியின் பணம் மீளப்பெறல் கணனி இயந்திர கட்டமைப்பை உடைத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒன்றில் 46 லட்சத்து 80... Read more »

30 ஆயிரம் அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு

இலங்கை முழுவதும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுச் செல்கின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இவ் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரே தடவையில் இவ்வாறு பெருமளவிலான அரச... Read more »

இருமல் மருந்தை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்! இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்

உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட, இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை  உட்கொண்டு 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி மத்திய மருந்து தரக்... Read more »

திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு – காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

திருவையாறு படித்த மகளீர் திட்டக் காணி இராணுவத்தினால் மீண்டும் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணியில் குடியேற சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திருவையாறு பகுதியில் படித்த மகளீர் திட்டம் ஊடாக 1975ம் ஆண்டு காணித்துண்டுகள் வழங்கப்பட்டது. குறித்த காணியில் விவசாயம்... Read more »

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவு!

காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்... Read more »

யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி – அல்வாய் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அம்பாள் வித்தியாலயத்துக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே நேற்று (30.12.2022) குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அல்வாய் – அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

பேருந்தில் கைவரிசை காட்டிய 3 பெண்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு

கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவி நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபாய் பணம்... Read more »