குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவு!

காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 12 ஆயிரத்து 707.2 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு மொத்தமாக 127.072 மில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews