யாழில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி – அல்வாய் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாள் வித்தியாலயத்துக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே நேற்று (30.12.2022) குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அல்வாய் – அம்பாள் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் குளிப்பதற்குச் சென்றவரே தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த கிணறு அறுபது அடி ஆழம் கொண்ட நிலையில் அதில் அமைக்கப்பட்ட கப்பி பாதுகாப்பற்ற முறையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews