கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். 2022/2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள... Read more »
முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உட்பட பேக்கரி உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில்... Read more »
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இலங்கை ரூபாவானது உலகின் நான்காவது தேய்மானம் அடைந்த நாணயமாக மாறியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கி சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »
வடமாகாணத்தின் 5வது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.ஜோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு சென் பற்றிக்ஸ் கல்லுரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ் பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய கலாசாலையின் அதிபராக சேவையாற்றியுள்ளார். பின்னர் உதவிக்... Read more »
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் பதவி உயர்வு பெற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளராக செல்கிறார். இந்நிலையில் புதிய... Read more »
யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் பதவி விலகும் நிலையில் மாநகரசபையை கலைப்பதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருப்பதாக மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கூறியுள்ளார். மேலும் புதிய முதல்வரை தொிவு செய்வதற்கு யாழ்.மாநகரசபை கட்டளை சட்டம் இடம்கொடுக்காது எனவும் உள்ளுராட்சி ஆணையாளர் தொிவித்திருக்கின்றார்.... Read more »
www.elukainews.com இணையதள வாசகர்கள், வm செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள், அனைவருக்கும் எமது இனிய கிறுஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம். பிறந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு எமது அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..இனிய... Read more »
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமையுடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வு பெற்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளராக செல்கிறார். இந்நிலையில்... Read more »
நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திர ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த விசித்திர ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு விவசாயி வீட்டிற்கு மக்கள் படையெடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்கு பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று... Read more »
இலங்கையில் முதல் முதல கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அம்பாறை ஆலயடிவேம்பு இந்து மாமன்ற மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (31) அம்பாறை தமிழ் ஊடகவியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அம்பாறை தமிழ்... Read more »